மார்க்சிஸ்ட் மாநாட்டுக் கொடி பயணக் குழுவுக்கு வரவேற்பு 

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டுக் கொடி பயணக் குழுவுக்கு திங்கள்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டுக் கொடி பயணக் குழுவுக்கு திங்கள்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-ஆவது மாநில மாநாடு பிப்.17-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு பிரசாரத்துக்கான கொடிப் பயணக்குழு சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் செல்கிறது.
 திங்கள்கிழமை இரவு விழுப்புரம் வந்த இந்த கொடி பயணக் குழுவுக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
 விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சீத்தா, மூர்த்தி, வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன், ஏ.சங்கரன், மாவட்டக்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
 இதனைத் தொடர்ந்து, கொடி பயணக் குழு செவ்வாய்க்கிழமை உளுந்தூர்பேட்டைக்கு புறப்பட்டுச் சென்றது.
 உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுக் கொடி பயணக் குழுவுக்கு செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் பிப்.17-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 இந்த மாநாட்டை முன்னிட்டு சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கட்சியின் மாநில மாநாட்டுக் கொடி எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் பயணக் குழுவுக்கு உளுந்தூர்பேட்டையில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
 இதற்கான நிகழ்ச்சியில் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கே.தங்கராசு வரவேற்றார்.
 பயணக் குழு நிர்வாகிகள் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக் குழு ஜி.ஆனந்தன் உள்ளிட்டோர் பேசினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com