செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தற்கொலையைக் கண்டித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தற்கொலையைக் கண்டித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்தவர் மணிமாலா. இவர் கடந்த 10ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் உமா தலைமையில் கருப்புப் பட்டை அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தலைமை செவிலியர்கள் நாகலட்சுமி, பி.கே.ராணி, கே.ராணி உள்ளிட்ட செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.
 பின்னர், செவிலியர் மணிமாலா மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com