விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் ஒன்றிய (மேற்கு) தேமுதிக சார்பில் கட்சிக்கொடி அறிமுகமான 18-ஆவது ஆண்டு ஆண்டு விழா திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, ஒன்றியச் செயலாளர் மாணிக். திருமுருகன் தலைமையில் காம்பட்டு, கோட்டையாம்பாளையம், திருநறுங்குன்றம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் அக்கட்சியினர் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினர்.
ஒன்றிய அவைத் தலைவர் சி.கேசவன், ஒன்றியப் பொருளாளர் டி.சக்தியேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.பழனிவேல், எம்.அய்யப்பன், ஊராட்சி கழகச் செயலாளர் எம்.சக்கரவர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் ஏ.அன்பழகன், செந்தூரபாண்டி, வேலு, ஜெய்பிரகாஷ், ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.