மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று சிறப்பு முகாம்

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது.
 விழுப்புரம் வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி மற்றும் வானூர் ஆகிய வட்டங்களுக்குரிய மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த முகாமுக்கு கோட்டாட்சியர் சரஸ்வதி தலைமை வகிக்கிறார்.
 காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் முதியோர் ஓய்வூதியத் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் மனுக்கள் அளித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com