திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வுப்ப ணிக்கான, தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டிவனம் கல்வி மாவட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, 73 மையங்களுக்கு தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி கலந்து கொண்டு, தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு அறைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கிப் பேசினார்.
திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) பா.ரவி, மாவட்டக் கல்வி அலுவலர் (பயிற்சி) கிருஷ்ணபிரியா, பள்ளித்துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், செஞ்சி அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் அ.திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.