விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோயிலில், ராகவேந்திரரின் 423-ஆவது அவதார தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வண்டிமேடு ராகவேந்திரர் கோவிலில் அவதார தின விழா காலை 5 மணிக்கு சுப்ரபாதத்துடன் தொடங்கியது. ஸ்தோத்ர பாராயணம் பாடினர். 7 மணிக்கு வண்டிமேடு ராஜகணபதி கோயிலிலிருந்து ராகவேந்திர சுவாமிகள் ஆலயம் வரை 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு நிர்மால்ய அபிஷேகமும், பஞ்சாமிர்த அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 6 மணிக்கு குருவாரா பஜனை மண்டலி சார்பில் ஹரிபஜன் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு சுவாமிக்கு மகாதீபாராதனையும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ராகவேந்திர சுவாமிகளை வழபட்டனர்.