வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

வானூர் அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

வானூர் அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
 விழுப்புரம் மாவட்டம், வி.புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தானப்பன்(75). இவரது மனைவி ராணி (70). இவர், வியாழக்கிழமை இரவு வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் தூங்கினார்.
 நள்ளிரவில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ராணி அணிந்திருந்த சுமார் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர்.
 இதையடுத்து, அவர் கூச்சலிடவே, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் வானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com