விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளையும் மூன்று நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள்படி, வருகிற ஜனவரி 15 (திங்கள்கிழமை) திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 (வெள்ளிக்கிழமை) குடியரசு தினம், ஜனவரி 31 (புதன்கிழமை) வள்ளலார் நினைவு தினம் ஆகிய மூன்று நாள்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள், மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.