திருக்கோவிலூரில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின்தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் டி.என்.முருகன், ஒன்றியச் செயலர்கள் (முகையூர்) ஜி.ரவிச்சந்திரன், (மணம்பூண்டி) அ.சா.ஏ.பிரபு, (திருக்கோவிலூர் மேற்கு) ஏகாம்பரம், (திருவெண்ணெய்நல்லூர்) விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியச் செயலர் மு.தங்கம் வரவேற்றார்.
தலைமைக் கழகப் பேச்சாளர் இரா.சபாபதிமோகன் கலந்துகொண்டு, திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை விளக்கியும், அதிமுக ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் சிறப்புரையாற்றினார். இளைஞரணி மாவட்டத் துணை அமைப்பாளர் எஸ்.அன்பு, ஒன்றியத் துணைச் செயலர் சங்கர், நகரச் செயலர் ஆர்.கோபி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் குணா(எ) டி.குணசேகரன் நன்றி கூறினார்.