கவிதை நூல் வெளியீட்டு விழா

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தமிழ்ப் படைப்பளர்கள் சங்கம் சார்பில், கல்லைக் கவிஞர் வீ.கோவிந்தராசனின் மயில்தோகை கவிதை நூல் வெளியீட்டு விழா

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தமிழ்ப் படைப்பளர்கள் சங்கம் சார்பில், கல்லைக் கவிஞர் வீ.கோவிந்தராசனின் மயில்தோகை கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தனியார்அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க மாநில பொதுச் செயலார் தமிழரிமா தா.சம்பத் தலைமை வகித்தார்.
 தியாகதுருகம் தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.ராதாகிருட்டிணன், பகுத்தறிவு இலக்கிய மன்றத் தலைவர் பெ.சயராமன், கல்லை இலக்கிய மருத்துவர் வே.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.சு.மலரடியான் வரவேற்றார்.
 தென்னாற்காடு மாவட்ட தமிழ்க் கவிஞர் மன்றப் பொருளாளர் குறிஞ்சி ஞான வைத்தியநாதன், டாக்டர் ஆர்.கே.சண்முகம் கல்வி நிறுவனங்களின் செயலாளர் என்.கோவிந்தராஜூ, தென்னாற்காடு மாவட்ட தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவர் ஆசுகவி பெ.ஆராவமுதன் உள்ளிட்டோர் பேசினர்.
 டாக்டர் ஆர்.கே.சண்முகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் க.மகுடமுடி, கவிஞர் கல்லை வீ.கோவிந்தராசனின் மயில்தோகை கவிதை நூலை வெளியிட்டுப் பேசினார்.
 முதல்நூலை டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரித் தாளாளர் கோ.சா.குமார், தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் மா.நடராசனார், மதுரை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் பொன்.முருகன், உள்ளிட்டோர் பெற்று பேசினர்.
 முன்னதாக நடைபெற்ற கவியரங்கில் கவிஞர்கள் கவிச்சிற்பி கவிதைத்தம்பி, தியாகதுருகம் தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவர் இதயம்.கிருட்டிணா, இளங்கவி அருள்ராஜ் உள்ளிட்டோர் கவிதை பாடினர். தமிழ்நாடு மல்லர் கம்பக் கழகப் பொதுச் செயலாளர் துரை.செந்தில்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com