குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் அளிப்பு

விழுப்புரத்தில் ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனம் சார்பில், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

விழுப்புரத்தில் ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனம் சார்பில், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
 எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களை சாப்பிடுவது அவசியம். அதன்படி, எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கொண்ட பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனத்தில் நடைபெற்றது.
 இதில், விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்களை வழங்கினர். நிகழ்ச்சியில் ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் பிரசாத், ஆலோசகர் அசோக், ஐ.ஏ.பி.எஸ். அமைப்பின் திட்ட இயக்குநர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com