ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

கச்சிராயப்பாளையத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் தங்க நகைகள், ரூ.ஒரு லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கச்சிராயப்பாளையத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் தங்க நகைகள், ரூ.ஒரு லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையம் வெங்கட்டம்மாபேட்டை சாலையில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (60). ஒய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவரது இரண்டாவது மகன் சுபனுக்கு வடக்கனந்தலில் உள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து உறவினர்களுடன் வீட்டுக்கு வந்து விட்டனர். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு மண்டபத்துக்கு சென்றிருந்தனராம். சாப்பாடு முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைந்திருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது இரும்பு அலமாரி, மேஜை மீது இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன.
மேலும், இரும்பு அலமாரியில் இருந்த ஐந்தரை பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் பணம் உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, கச்சிராயப்பாளையம் போலீஸார்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com