சமூக சீர்திருத்த எழுச்சி நாள் விழா

சங்கராபுரத்தில் கற்க கசடற கலை இலக்கிய கழகம் சார்பில் சமூக சீர்திருத்த எழுச்சி நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

சங்கராபுரத்தில் கற்க கசடற கலை இலக்கிய கழகம் சார்பில் சமூக சீர்திருத்த எழுச்சி நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, கவிஞர் பாரதிகிருஷ்ணன் தலைமை வகித்தார். கால்நடைத் துறை இரா.கலியமூர்த்தி, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க.செம்பியன், அரிமா மாவட்டத் தலைவர் வ.விஜயகுமார், ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் அ.முகமத்ரபி, திராவிடர் விடுதலைக் கழகம் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் தா.சிந்தனைச்செல்வி வரவேற்றார்.
விழாவில் தென்னிந்தியாவின் சமூக சீர்திருத்தவாதி பண்டிதர் அயோத்திதாசர் என்ற தலைப்பில் கவிஞர் கலிய.செல்லமுத்து, வட இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலே என்ற தலைப்பில் கவிஞர் தேவதிருவருள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரிமா மாவட்டத் தலைவர் ஜனனி.மகாலிங்கம், பெரியாரின் பெருந்தொண்டர் சாந்தகுமார்,
தமிழாசிரியர் அ.ராமசாமி, ஈப்பு ஓட்டுநர் நா.தனவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவிஞர் அ.ராஜ்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com