திருக்கோவிலூர் அருகே அரசு நகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் ஆற்காட்டில் இருந்து திருக்கோவிலூருக்கு அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, பரனூர் கிராமத்தில் மர்ம நபர் ஒருவர் பேருந்தின் பின்புற கண்ணாடி மீது கல்வீசி தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து, அரகண்டநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து அந்த நபரை தேடி வருகின்றனர்.