மாஷபுரீஸ்வரர் கோயிலில் இன்று தேரோட்டம்

உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட உளுந்தாண்டார்கோயில் மாஷபுரீஸ்வரர் கோயிலில் லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர்(சிவன்) தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை (மே 27)

உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட உளுந்தாண்டார்கோயில் மாஷபுரீஸ்வரர் கோயிலில் லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர்(சிவன்) தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை (மே 27) நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாள் இரவிலும் பஞ்சமூர்த்திகள் சுவாமிகளுக்கு தீபாராதனை செய்தனர்.
பின்னர், புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கை முழங்க வீதியுலா நடைபெற்றது.
25-ஆம் தேதி மாலை சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான மாஷபுரீஸ்வரர் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
தேரை உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ இரா.குமரகுரு வட பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கிவைக்கிறார்.
28-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் ஞானதீர்த்தக் குளக்கரையில் சுவாமிக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com