ரூ. 4.47 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் ரூ. 4.47 கோடி மதிப்பீட்டில் தார்ச் சாலை அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏ இரா.குமரகுரு

உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் ரூ. 4.47 கோடி மதிப்பீட்டில் தார்ச் சாலை அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏ இரா.குமரகுரு அண்மையில் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார்.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், ஆனத்தூர் - குச்சிப்பாளையம் - மேல்தணியாளம்பட்டு வரை 5 கி.மீ. சாலையை ரூ. 2.48 கோடி மதிப்பீட்டிலும், அரும்பட்டு முதல் ஆத்திப்பட்டு வரை 1.50 கி.மீ. சாலையை ரூ. 1.99 கோடி செலவில் ஒருவழிச் சாலையை இருவழிச் சாலையாக மாற்றி தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. பணிகளை பூமி பூஜை செய்து இரா.குமரகுரு எம்எல்ஏ தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் தேவயிரக்கம், உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் மணிமொழி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் ராமலிங்கம், ராஜகோபால் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com