வாகனம் மோதி பெண் சாவு

சின்னசேலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தார்.

சின்னசேலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
சின்னசேலத்தை அடுத்த அம்மையகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சஜ்ஜத் மனைவி ருவைதாகார்ட்டூன் (25). இவர் ரமலான் நோன்பு காலத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலைக்கடன் கழிப்பதற்காக தனது வீட்டின் எதிரே உள்ள சேலம்-சென்னை நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது, சென்னையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். உடனே அவரது சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com