கள்ளக்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் வசிப்பவர் பாண்டுரங்கன் (51), லாரி ஓட்டுநர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் இருவரும் சென்னையில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காகச் சென்றிருந்தனர்.
இந்த நிலையில், பாண்டுரங்கனின் நண்பர் ராஜா, அவரை பார்ப்பதற்காக வியாழக்கிழமை வீட்டுக்குச் சென்றார். அப்போது, அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்படிருந்தைக் கண்டு, பாண்டுரங்கனுக்கு செல்லிடப்பேசி வாயிலாக தகவல் தெரிவித்தார்.
பாண்டுரங்கன் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், அறையில் இருந்த தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை காணவில்லையாம்.
இது குறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.