கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூரில் உள்ள சுங்கச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் தேநீர் வழங்கி சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ந.ராமநாதன், கள்ளக்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் தங்க.விஜயகுமார் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் பாலமுரளி, பாலசிங்கம் , ராதாகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் சுங்கச் சாவடிக்கு சென்று அதிகாலை ஒரு மணி முதல் 4 மணி வரை அவ்வழியாக வந்த பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கினர்.
தூக்கக் கலக்கத்தைப் போக்கும் பொருட்டு தேநீர் வழங்கப்பட்டது. மேலும், விபத்தை தவிர்க்கும் வகையில் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.