உளுந்தூர்பேட்டை வட்டம், நெய்வனை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட வழங்கல் அலுவலர் க.ராஜேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப்.11) நடைபெறுகிறது.
இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக எழுதிக்கொடுத்து பயன்பெறலாம்.
இத்தகவலை உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் ஜி.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.