ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும்: மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மனு

விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள  சாலாமேடு உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த மாட்டு வண்டித் தொழிலாளர்கள் 100 பேர்,  செவ்வாய்க்கிழமை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து,  ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.   
அப்போது அவர்கள் கூறுகையில், அரசு வழங்கி வரும் தொகுப்பு வீடுகளுக்கு மணலின்றி பணி தடைபடுகிறது.   மாட்டு வண்டித் தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
 இதை கருத்தில் கொண்டு,   மீண்டும் ஆற்றில் கட்டணம் செலுத்தி மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.  கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com