மக்கள் தொடர்பு முகாம்

உளுந்தூர்பேட்டை வட்டம், நெய்வனை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

உளுந்தூர்பேட்டை வட்டம், நெய்வனை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  முகாமில் வருவாய் வட்டாட்சியர் ஜி.இளங்கோவன், சமூக நல வட்டாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் வெங்கடாஜலபதி வரவேற்றார். முகாமில் 18 பயனாளிகளுக்கு வீட்டுமனை, 23 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், 26 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டு,  20 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை என மொத்தம் 93 பயனாளிகளுக்கு ரூ. 6.80 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வழங்கல் அலுவலர் க.ராஜேந்திரன் வழங்கினார்.   முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் ரகுராமன், மண்டல துணை வட்டாட்சியர்கள் கார்த்திகேயன், மணிமேகலை, அலுவலக உதவியாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com