தேமுதிகவின் 14-ஆவது ஆண்டு விழா திண்டிவனம் நகர தேமுதிக சார்பில் வெள்ளிகிழமை கொண்டாடப்பட்டது.
காந்தி சிலை அருகே பட்டாசுகள் வெடித்து கொண்டிய அந்தக் கட்சியினர் நகரச் செயலர் ஏ.காதர்பாஷா தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டத் துணை செயலர் வெங்கடேசன், நிர்வாகிகள் செல்வம், நடராஜன், வகாப், ரமேஷ், முஸ்தபா, பிரகாஷ், தியாகராஜன், சக்திவேல், நாராயணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.