மயிலம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிகிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் - மேலாண் இயக்குநர் ம.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுகுமாறன், செயலர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செந்தில் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர்
மா.ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரிக் கால நினைவுகளையும், தற்போது பணிபுரியும் இடத்தின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். மேலும், தற்போது கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பு தொடர்பான உதவிகள், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்தனர். கல்லூரியின் புல முதன்மையர் ராஜப்பன் நன்றி கூறினார்.