இளைஞருக்கு மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநர் 2 பேர் கைது

சங்கராபுரம் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, ஆட்டோ ஓட்டுநர் 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.


சங்கராபுரம் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, ஆட்டோ ஓட்டுநர் 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சங்கராபுரத்தை அடுத்த மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் பாஸ்கரன்(27), பாவளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன்(23), அருணாசலம் மகன் கணபதி(20).
ஆட்டோ ஓட்டுநர்களான இவர்கள் மூவரும், தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் முருகனை(23) அவதூறாகப் பேசி, கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, முருகன் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து பாஸ்கரன், கணபதி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com