மு.க.ஸ்டாலினுக்கு திண்டிவனத்தில் வரவேற்பு

திமுக தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்த


திமுக தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு சனிக்கிழமை திண்டிவனத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவுக்கு அந்தக் கட்சியின் தலைவர்
மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக காரில் சென்றார். அவருக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலரும் செஞ்சி தொகுதி எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மஸ்தான் தலைமையில் திண்டிவனம் புறவழிச் சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் சால்வை மற்றும் நினைவுப் பரிசுகளை ஸ்டாலினுக்கு வழங்கி வாழ்த்து பெற்றனர்.
நிகழ்ச்சியில் திமுக எம்.எல்.ஏக்கள் இரா.மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாநில மருத்துவரணி துணைச் செயலர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சேதுநாதன், செந்தமிழ்செல்வன், நகரச் செயலர் வெண்ணிலா கபிலன், ஒன்றியச் செயலர்கள் மணிமாறன், சொக்கலிங்கம், ராஜாராம் மற்றும் நகர
நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com