கட்சி கொடிக் கம்பம் அகற்றம்: நாம் தமிழர் கட்சியினர் புகார்

ரிஷிவந்தியம் அருகே நாம் தமிழர் கட்சி கொடிக் கம்பத்தை அகற்றிய போலீஸார் மீது நடவடிக்கை கோரி, அந்தக் கட்சியினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர்.

ரிஷிவந்தியம் அருகே நாம் தமிழர் கட்சி கொடிக் கம்பத்தை அகற்றிய போலீஸார் மீது நடவடிக்கை கோரி, அந்தக் கட்சியினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர்.
இது குறித்து,  தொகுதிச் செயலர் மு.குமரேசன் தலைமையில் வந்த நாம் தமிழர் கட்சியினர்,  ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கிய புகார் மனுவில் கூறியதாவது:
ரிஷிவந்தியம் அருகே உள்ள மேலத்தனூரில் பிற அரசியல் கட்சியினர் அமைத்துள்ள இடத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடிக் கம்பத்தையும் அமைத்திருந்தோம்.   இந்த நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த ரிஷிவந்தியம் உதவி ஆய்வாளர் சபரிமலை மற்றும் போலீஸார் எந்தவித தகவலும் தெரிவிக்காமல், இரவு நேரத்தில் கொடிக் கம்பத்தை இயந்திரம் மூலம் அகற்றிவிட்டனர். இதே போல, அருகேயுள்ள எம்.தாங்கல் கிராமத்திலும் நாம் தமிழர் கட்சிக் கொடிக் கம்பத்தையும் போலீஸார் அகற்றியுள்ளனர்.  இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com