பக்தவத்சலத்துக்கு நாளை நினைவஞ்சலி: தேவெ கெளடா பங்கேற்பு

கோலார் தங்கவயலில் வியாழக்கிழமை நடைபெறும் மறைந்த முன்னாள் எம்எல்ஏ மு.பக்தவத்சலத்தின்

கோலார் தங்கவயலில் வியாழக்கிழமை நடைபெறும் மறைந்த முன்னாள் எம்எல்ஏ மு.பக்தவத்சலத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா பங்கேற்று அவரது உருவப்படத்தை
திறந்துவைக்கிறார்.
கோலார் தங்கவயலின் நவ. 28-ஆம் தேதி முன்னாள் எம்எல்ஏ மு.பக்தவத்சலம் காலமானார்.அவருடைய நினைவஞ்சலி நிகழ்ச்சி வியாழக்கிழமை (டிச. 13) கோலார் தங்கவயலில் நடைபெற உள்ளது. அன்று காலை 11மணியளவில் நகரசபை மைதானத்தில் அவருடைய படத்திறப்பு நிகழ்ச்சி
நடைபெறுகிறது. 
வழக்குரைஞர் மணிவண்ணன் வரவேற்கிறார். மஜத மாநிலத் தலைவர் விஸ்வநாத், மாவட்டத் தலைவர் வேங்கடசிவ, மக்களவை உறுப்பினர் கே.எச்.முனியப்பா, எம்.எல்.ஏக்கள். ரூபகலா, நாராயணசாமி, சீனிவாசகவுடா, நாகராஜ், முன்னாள் பேரவை உறுப்பினர்கள் எஸ்.ராஜேந்திரன், ஒய்.சம்பங்கி, ராமக்கா, கொத்தூர் மஞ்சுநாத், வேங்கடேசப்பா, வேங்கடமுனியப்பா, எம்.எல்.சிகள் நசீர் அகமது, சிவண்ணாமனோகர், முன்னாள் அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இரங்கல் உரையை நிகழ்த்துகின்றனர். முன்னதாக நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, பக்தவத்சலத்தின் உருவப்படத்தை திறந்துவைத்து பேசுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com