கஞ்சாவை பயிரிட்டதாக, விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு வடக்கு வட்டம் அப்பிகெரே நகராளு கிராமத்தைச் சேர்ந்தவர் விருபாக்ஷப்பா மகாதேவப்பா கமதரா (70). இவர் அப்பிகெரே நகராளு சாலைக்கு அருகேயுள்ள தனது நிலத்தில் கஞ்சாவை பயிரிட்டிருந்தாராம்.
தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று, விருபாக்ஷப்பா மகாதேவப்பா கமதராவை கைது செய்தனர். பின்னர், அவரது நிலத்தில் பயிரிட்டிருந்த 20 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.