நாகை மாவட்டம், குத்தாலம் அருகே சாராயம் விற்றதாக பெண் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பெருஞ்சேரி சுண்ணாம்புகாரத் தெருவைச் சேர்ந்த துரை மனைவி வெண்ணிலா (50). இவர் தனது வீட்டின் அருகே புதுச்சேரி மாநில சாராயத்தை விற்பனை செய்து வருவதாக பெரம்பூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீஸார் அங்கு சென்று, விற்பனைக்கு வைத்திருந்த 110 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றி, வெண்ணிலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.