கத்தியால் குத்தி பெண் கொலை: தனியார் நிறுவன ஊழியர் கைது

கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனியார் நிறுவன ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.


கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனியார் நிறுவன ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு பைரதி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஆனந்த் (38). இவரது மனைவி ஸ்நேகா. இவர்களுக்கு 11 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், ஸ்நேகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பரத் என்பவருடன் தொடர்பு இருந்துவந்ததாம். இதுதொடர்பாக சனிக்கிழமை இரவு தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பரத்தை தனது வீட்டுக்கு வருமாறு ஸ்நேகா கூறியுள்ளார். அங்கு வந்த பரத்துக்கும், ஆனந்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு வந்த பரத்தின் பெற்றோர் சன்னப்பா, சாவித்ரியம்மா (43) ஆகியோர் பரத்துக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் அங்கிருந்த கத்தியை எடுத்து, சாவித்திரியம்மாவை குத்தினாராம். இதைத் தடுக்கச் சென்ற, பரத், சன்னப்பாவையும் ஆனந்த் கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த சாவித்திரியம்மா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த சன்னப்பா, பரத் ஆகிய 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த கொத்தனூர் போலீஸார், ஆனந்தை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com