பெங்களூரு ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் நவம்பர் 23 முதல் 25-ஆம் தேதி வரை அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது.
இது குறித்து ஜவஹர்லால் நேரு கோளரங்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.செளடையா சாலையில் அமைந்துள்ள ஜவஹர்லால்நேரு கோளரங்கத்தில் நவம்பர் 23 முதல் 25-ஆம் தேதி வரை அறிவியல் கண்காட்சி நடக்கவிருக்கிறது.
நவம்பர் 23-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கண்காட்சியை விஸ்வேஷ்வரையா தொழில்நுட்ப அருங்காட்சியக இயக்குநர் கே.மதன்கோபால் தொடக்கிவைக்கிறார்.
இந்தக் கண்காட்சி தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும். பார்வையிட கட்டணம் எதுவுமில்லை. கூடுதல் விவரங்களுக்கு www.taralaya.org என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.