வீட்டில் புகுந்த மர்மநபர் பெண்ணைத் தாக்கி அவரிடமிருந்த நகைகளை பறித்துச் சென்றார்.
பெங்களூரு ஆர்.டி.நகர் முதலாவது முக்கிய சாலையைச் சேர்ந்தவர் மாலா. இவர் திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், அவரது தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் மயங்கி கீழே விழுந்த மாலாவிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கநகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஆர்.டி.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.