டிச.5-இல் அஞ்சல் சேவைகள் குறைதீர் முகாம்

பெங்களூரில் டிச.5-ஆம் தேதி அஞ்சல் சேவைகள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.

பெங்களூரில் டிச.5-ஆம் தேதி அஞ்சல் சேவைகள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக அஞ்சல் வட்டத்தின் சார்பில் பெங்களூரு, அரண்மனை சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அதிகாரி, கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலக மாநாட்டு அரங்கில் டிச.5-ஆம் தேதி மாலை 3 மணி அளவில் அஞ்சல்சேவைகள் குறைதீர்முகாம் நடத்தப்படுகிறது. 
பெங்களூரு மண்டலத்தை சேர்ந்த அஞ்சல்துறை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் ஏதாவது இருந்தால், அவற்றை உதவி இயக்குநர்(அஞ்சல் இயக்கம்), தலைமை அஞ்சல் அதிகாரி, கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலகம், பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு நவ.27-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். புகார்களை t‌e​c‌h.‌k​a@‌i‌n‌d‌i​a‌p‌o‌s‌t.‌g‌o‌v.‌i‌n  என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். புகார்களுடன் ஆதாரங்களை இணைப்பது நல்லது. மேலும் புகார் கடிதத்தில் தெளிவான தொடர்பு முகவரியை குறிப்பிடவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com