கஞ்சா விற்பனை:  3 பேர் கைது

கஞ்சா விற்பனை செய்ததாக,  3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை செய்ததாக,  3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடரமணா (35), பெங்களூரு ஒயிட்பீல்டில் கஞ்சா விற்பனை செய்து வந்தாராம். 
தகவலின்பேரில் போலீஸார், வெங்கடரமணாவைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். 
மற்றொரு சம்பவம்: பெங்களூரு அல்சூரைச் சேர்ந்த ரிஹான் (35), கோலார் மாவட்டத்துக்குள்பட்ட சிந்தாமணியைச் சேர்ந்த நாராயணசாமி(48) ஆகிய இருவரும் மகாதேவபுரா ஜி.நாராயணபுராவில் கஞ்சா விற்பனை செய்து வந்தனராம். 
தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்று, 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com