விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து கோவா வழியாக பெங்களூருக்கு வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட  ஒரு கிலோ 319 கிராம் தங்கத்தை சுங்க வரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.

துபையிலிருந்து கோவா வழியாக பெங்களூருக்கு வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட  ஒரு கிலோ 319 கிராம் தங்கத்தை சுங்க வரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு கெம்பே கெளடா சர்வதேச விமான நிலையத்துக்கு செப்.16-ஆம் தேதி துபையிலிருந்து கோவா வழியாக பெங்களூரு வந்த தனியார் விமானத்தில் வந்த பயணி செருப்பில் தங்கத்தை உருக்கி பசையாக ஒட்டி கடத்தி வந்தது தெரியவந்தது. 
தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க வரித் துறை அதிகாரிகள், கோவாவைச் சேர்ந்த சல்மான் பேரிஸிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த செருப்பை மற்றொரு பயணி சமீர் அலி அணியச் செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com