விதிமுறைகளை மீறி வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்றதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ஆர்.எம்.சி.யார்டு பகுதியில் விதிமுறைகளை மீறி வெளிநாட்டு சிகரெட்டுகளை சிலர் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார், வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த மல்லேஸ்வரம் எம்.டி.பிளாக்கை சேர்ந்த அம்ஜத் பாஷா (34), யஸ்வந்தபுரம் சதீஷ்குமார் (41), மைசூரு மொஹல்லாவைச் சேர்ந்த ஜெயந்திலால் (36) ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆர்.எம்.சி.யார்டு போலீஸார் விசாரிக்கின்றனர்.