கேளிக்கை விடுதிகளில் சோதனை: 194 பேர் கைது

உப்பார்பேட்டை காவல் சரகத்தில் உள்ள 2 கேளிக்கை விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 194 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உப்பார்பேட்டை காவல் சரகத்தில் உள்ள 2 கேளிக்கை விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 194 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு உப்பார்பேட்டை காவல் சரகத்தில் கே.ஜி.சாலையில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியிலும்,  பலேபேட்டை ஆஸ்டல்சாலையில் உள்ள மற்றொரு கேளிக்கை விடுதியிலும் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 194 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 38.12 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உப்பார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com