மாநில அளவில் செப். 28-ஆம் தேதி மருந்தகங்கள் மேற்கொள்ள உள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு, கர்நாடக மருந்து விநியோகிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தராது என அறிவித்துள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கர்நாடக மருந்து விநியோகிப்பாளர்கள் சங்கத்தின் செயலர் என்.மஞ்சுநாத் செய்தியாளர்களிடம் கூறியது: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் உள்ள மருந்தகங்கள் செப். 28-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த போராட்டத்துக்கு கர்நாடக மருந்து விநியோகிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தருவதில்லை என முடிவு செய்துள்ளது. எங்கள் சங்கத்தின் சார்பில் கடந்த செப். 22-ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுத்துள்ளோம்.
மருந்தகங்களை மூடுவதால், நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதை மருந்தகங்களின் உரிமையாளர்கள் உணர்ந்து முழு அடைப்புப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார் அவர்.