சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்த போலீஸார், ரூ. 5 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூரு சஹகாரநகர் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். இதனையடுத்து, அங்கு சென்ற போலீஸார், சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்துரு (65), சாந்தகுமார் (46), ராஜுரெட்டி (54), பாஸ்கர் (59), ரமேஷ் (45), மஞ்சுநாத் (40), ஸ்ரீகாந்த் (38), வேணுகோபால் (40), ரவிகுமார் (45), விக்னேஷ் (35), நாராயணசாமி (46), சந்திரசேகர் (42), சந்தீப் (40), சந்திரப்பா (40), ஹம்பனா (53), ரமேஷ் (59), சங்கர் (52), சிவபிரசாத் (45) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து கொடிகேஹள்ளி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.