மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
பெங்களூரு பீன்யாவைச் சேர்ந்தவர் சரத் (22). இவர் அதே பகுதியில் உள்ள சாக்லேட் தயாரிக்கும் தொழில்சாலையில் பணியாற்றி வந்தாராம். இரவு 10.30 மணியளவில் பணி முடிந்து, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். பீன்யா மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சரத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிந்த பீன்யா போக்குவரத்து போலீஸார், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைத் தேடி வருகின்றனர்.