பெங்களூரில் பிப்.18-ஆம் தேதி குடிநீர் குறைதீர் முகாம் நடக்கவிருக்கிறது.
இது குறித்து பெங்களூரு குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றல் வாரியம்(பிடபிள்யூஎஸ்எஸ்பி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் சார்பில் குடிநீர் வழங்கல், கழிவுநீர் இணைப்பு தொடர்பான குறைகளைத் தீர்த்துவைக்க குறைதீர்முகாம்களை நடத்திவருகிறது. பெங்களூரு, பிடிஎம் லேஅவுட்டில் உள்ள வாரியத்தின் உதவி செயல் பொறியாளர் அலுவலகத்தில்(9-ஆவது பிரதானசாலை) பிப்.18-ஆம் தேதி காலை 9.30மணி முதல் காலை 11 மணி வரை குடிநீர் குறைதீர்முகாம் நடத்தப்படுகிறது. இதில் தெற்கு-3 நீரேற்று மையத்திற்குட்பட்ட பிடிஎம் லேஅவுட் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டு குறைகளுக்கு தீர்வு கண்டுகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 080-22238888, 8762228888 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.