கெங்கேரி காவல் நிலையத்தில் வாரிசுதாரர்கள் இல்லாத இரு சக்கர வாகனங்கள் வியாழக்கிழமை(பிப். 21)ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு கெங்கேரி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரர்கள் இல்லாத 30 இரு சக்கர வாகனங்களும், 2 நான்கு சக்கர வாகனங்களும் ஏலம் விடப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080- 22942510 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.