விபத்தில் மூதாட்டி சாவு

ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மீது மோதியதில்,  மூதாட்டி இறந்தார்.

ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மீது மோதியதில்,  மூதாட்டி இறந்தார்.
பெங்களூரு காடயகரனஹள்ளியைச் சேர்ந்தவர் சுப்பம்மா (70). இவர் உள்ளிட்ட 3 பேர் ஞாயிற்றுக்கிழமை காலை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். 
மைலனஹள்ளி அருகே எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளும்,  ஆட்டோவும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த சுப்பம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். மேலும், காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்து சிக்ஜாலா போக்குவரத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com