ரெளடியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு காட்டன்பேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ் (28). காட்டன் பேட்டை காவல் நிலையத்தில் ரெளடிப் பட்டியிலில் இடம் பெற்றிருந்த இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சதீஷுக்கும் அவரது நண்பர் பிரஷாந்த் என்பவருக்கு ஆஞ்சனப்பா கார்டனில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் தன்னிடமிருந்த ஹாக்கிமட்டையால் பிரஷாந்தை தாக்கியுள்ளார். இதனையடுத்து தனது வீட்டிற்கு சென்ற பிரஷாந்த், உள்ளே இருந்து கத்தியை எடுத்து வந்து சதீஷை குத்திவிட்டுத் தப்பினார்.
இதில் பலத்த காயமடைந்த சதீஷ் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து காட்டன்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான பிரஷாந்தை தேடி வருகின்றனர்.