லாரி மோதியதில் வியாபாரி சாவு

பால் லாரி மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற பூ வியாபாரி உயிரிழந்தார்.

பால் லாரி மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற பூ வியாபாரி உயிரிழந்தார்.
ஒசூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). பூ வியாபாரியான இவர் தினந்தோரும் பெங்களூரில் வியாபாரம் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை பெங்களூரிலிருந்து ஒசூருக்குச் செல்வதற்காக ஆடுகோடி போக்குவரத்து காவல் சரகம் பிஜிஎஸ் சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது வேகமாக வந்த பால் லாரி மோதியதில் வியாபாரி பலத்த காயமடைந்தார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆடுகோடி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com