கிரிக்கெட் சூதாட்டத்தில் 3 பேர் கைது

பெங்களூரில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூரில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு வி.வி.புரம் புரகல்மடச்சாலையில் உள்ள கட்டடத்தில் சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். 
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஹேமந்த் ஜெயின் (41), மகேஷ்குமார் (40), பிரவீண்குமார் (41) ஆகியோரை கைது செய்து, ரூ. 5.6 லட்சம் ரொக்கப்பணம், 6 செல்லிடப்பேசிகள், ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வி.வி.புரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com