வட கர்நாடக மாவட்டம், கார்வார் அருகே வியாழக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வெழுத சென்ற மாணவர் உயிரிழந்தார்.
வடகர்நாடக மாவட்டம், பட்கலைச் சேர்ந்தவர் சமாஷ் (17). வியாழக்கிழமை காலை எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுத தனியார் கல்வி மையத்தின் காரில் சென்று கொண்டிருந்தார். கார்வார் அருகே உள்ள ஹோசூரில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சமாஷ், நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.