புயல் பாதித்த பகுதிகளுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள்

கஜா புயல் பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்தோர் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்ப


கஜா புயல் பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்தோர் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, அதிமுக தலைமை அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிறிஸ்துவ சமுதாய மக்களோடு அதிமுக பகிர்ந்து கொள்ள விரும்புகிறது. அதன்படி, புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் கிறிஸ்துவ சமுதாய மக்கள் வாழும் இடங்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு விழாக்கால வாழ்த்துகளைப் பகிர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து நிவாரணப் பொருள்கள் தனி வாகனம் மூலமாக புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com