260 திருட்டு செல்லிடப்பேசிகள் பறிமுதல்

சென்னை பர்மா பஜார் கடைகளில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டு 260 திருட்டு செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை பர்மா பஜார் கடைகளில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டு 260 திருட்டு செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
தியாகராய நகர் காவல் மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு, பர்மா பஜாரில் உள்ள சில கடைகளில் திருட்டு செல்லிடப்பேசிகள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவல்களின் அடிப்படையில் பர்மா பஜாரில் உள்ள சில கடைகளில் வியாழக்கிழமை திடீர் சோதனை செய்தனர். இச்சோதனையில், ஒரு கடையில் இருந்து மட்டும் திருடி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 ஐ-போன்கள் உள்பட 70 விலை உயர்ந்த செல்லிடப்பேசிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்தக் கடையில் இருந்த பெரம்பூரைச் சேர்ந்த அப்துல்ரகுமான் (25) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல் மொத்தம் 9 கடைகளில் சோதனை செய்யப்பட்டு, திருட்டு செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் மொத்தம் 260 செல்லிடப்பேசிகள், 20 மடிக்கணினிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்த வியாபாரிகளிடம் திருட்டு செல்லிடப்பேசிகளை விற்ற நபர்கள் குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும், தியாகராய நகர் சத்யா பஜாரிலும் உள்ள சில கடைகளில் போலீஸார் சோதனை செய்து, நூற்றுக்கணக்கான செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com